குமாரபாளையத்தில் சி.பி.ஐ. எம்.எல். கட்சி சார்பில் உறுதி மொழி ஏற்பு

குமாரபாளையத்தில் சி.பி.ஐ. எம்.எல். கட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-09 15:00 GMT

குமாரபாளையம் சி.பி.ஐ. எம்.எல். கட்சி சார்பில் ஆகஸ்டு 9 வெள்ளையனே வெளியேறு நிகழ்வை மையப்படுத்தி அரசியல் சாசனம் முகப்புரை வாசித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வு ஒன்றிய செயலர் வெங்கடேசன் தலைமையில் காவேரி நகரில் நடைபெற்றது. இந்திய இறையாண்மையை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம், இந்திய ஒற்றுமையை பாதுகாக்கும் உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம், என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். ஆகஸ்டு 15ல் மீண்டும் உறுதிமொழி நிகழ்வு நடைபெறவுள்ளது என நிர்வாகிகள் தெரிவித்தனர். நகர செயலாளர் சுப்ரமணி, மாவட்ட செயலர் பொன்.கதிரவன், அசோக், முருகன், செல்வம், பிரபாகரன், பேபி, ருக்மணி சரசு, பானு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News