மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில் கைது

குமாரபாளையத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-10 14:45 GMT

குமாரபாளையத்தை சேர்ந்த 2வது கணவன்,மனைவி போக்சொவில் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் சவுண்டேஸ்வரி கூறியதாவது:

மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஒன்று படுவோம், உறுதி ஏற்போம் திட்டத்தின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள், அந்தந்த பகுதி வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது, அதில் பங்கேற்ற 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தன்னை தன அம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிரகாஷ்,( 40, )என்பவர் பாலியல் வன்கொடுமை செய்வதாக கூறினார். இது குறித்து விசாரணை செய்து அதிகாலை 05:00 மணியளவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள முருங்கைகாடு பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டின் கதவை தட்டி, அங்கிருந்த பிரகாஷ், மற்றும் சிறுமியின் அம்மா துளசி,( 35,) ஆகிய இருவரையும் திருச்செங்கோடு மகளிர் போலீசில் ஒப்படைத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சிறுமி துளசியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்துள்ளது. சிறுமி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News