வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

குமாரபாளையத்தில் , வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-05 04:30 GMT

விடியல் ஆரம்பம்  அமைப்பு சார்பில், குமாரபாளையத்தில் வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியில், முதல் சுதந்திரப் பெண் போராளி   வேலுநாச்சியார் மற்றும் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்  பிறந்தநாள் விழா,   விடியல் ஆரம்பம் அமைப்பின் சார்பாக, அதன் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில், இருவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது.  

மேலும், அப்பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி,  நாடகப் போட்டி, மற்றும் மாறுவேட போட்டி வைக்கப்பட்டு,  வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வேலு நாச்சியார் போலவும், வீரபாண்டிய கட்டபொம்மன் போலவும் வேடமணிந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

மாணவ மாணவர்களுக்கு  முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் கொடுக்கப்பட்டது. பொதுநல ஆர்வலர் ராஜாத்தி,  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் மணி கிருஷ்ணா,வினோத், உதவிக்கரம் அங்கப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News