குமாரபாளையத்தில் அதிக மதிப்பெண்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
குமாரபாளையத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் 4வது வார்டில் தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புஷ்பா. இவர் தனது தேர்தல் வாக்குறுதியில் தனது வார்டு பகுதியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளி பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார்.
அதன்படி அந்த வார்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா கவுன்சிலர் புஷ்பா ஏற்பாட்டின் பேரில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி துவக்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் செல்வராஜ், ஐயப்பன், ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.