சாலையில் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற திமுக நிர்வாகி கைது

சாலையில் தனியாக சென்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட திருச்செங்கோடு திமுக நகர இளைஞர் அணி இணை அமைப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-03-17 06:11 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை சாலையில் நேற்றிரவு வேலைக்குச் சென்ற பெண் பணியை முடித்து திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை வழிமறித்து பாலியல் தொந்தரவு மேற்கொள்ள முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிட அப்பகுதியினர் பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட முயன்ற இளைஞரை அடித்து உதைத்து வெப்படை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பதும், இவர் திருச்செங்கோடு திமுகவின் நகர இளைஞரணி இணை அமைப்பாளராக பதவி வகித்து வருவதாகவும் தெரிய வந்தது.

அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு சாலையில் வந்தபோது அந்த பெண்ணை வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News