பஸ் ஸ்டாண்ட் செல்லாத பஸ் : ஓட்டுனர்- நடத்துனர்களிடம் எச்சரித்த திமுகவினர்

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்லாத பஸ் ஓட்டுனர், நடத்துனர்களிடம் தி.மு.க.வினர் எச்சரித்து அனுப்பினர்

Update: 2022-06-29 13:15 GMT

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் பவானி செல்வதற்காக திரும்பும் அரசு டவுன் பஸ்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்லாத பஸ் ஓட்டுனர், நடத்துனர்களிடம் திமுகவினர் எச்சரித்து அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது..

சேலம், சங்ககிரி பகுதிகளிலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வராமல் பள்ளிபாளையம் பிரிவு சாலை வழியாக பவானி செல்கிறார்கள். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் வைத்திருப்போர், நூல் பண்டல், பூ மூட்டை, உள்ளிட்ட பாரங்கள் கொண்டு வருபவர்கள் மீண்டும் ஆட்டோ பிடித்து செல்லும் நிலை உள்ளது. நேற்று காலை இது போல் பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் பவானி போகும் பஸ்களை வழிமறித்து, பஸ் ஸ்டாண்ட் சென்றுதான் பவானி போக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்படும் என்று திமுக நகர செயலர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரால் அறிவுறுத்தப்பட்டது.


Tags:    

Similar News