தமிழகத்தின் அரசியல் வாரிசே!! மதுரையில் பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்களின் போஸ்டர்…

எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே.. என மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-12-15 08:57 GMT

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்.

திரைப்படத்தை தவிர்த்து தமிழக அரசியல் இல்லை என்ற காலம் கடந்த 50 ஆண்டுகளாகவே நிலவி வருகிறது. தமிழ்நாட்டு அரசியலுக்கும், திரைப்படத் துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றே கூறலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர் ஆவர். மேலும் நடிகர் கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டவர்கள் கட்சி நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு ஏற்றால்போல, நடிகர் விஜயின் பிறந்தநாள் மற்றும் அவர் நடித்த திரைப்படம் வெளியாகும் போது அரசியல் சார்ந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை அவரது ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள தனது மன்ற தலைமை அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார்.

விஜய் அரசியலுக்கு விரைவில் வருவார் என பல விவாதங்களை எழுப்பி வரும் நிலையில், மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில், எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே.. என்ற வாசகத்துடன் பிரம்மாண்ட போஸ்டர் ஒன்றை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும், அந்த போஸ்டரில் அரசியல் வாரிசுகளான ராகுல் காந்தி, ஸ்டாலின், துரை வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி, தமிழக முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், வாரிசு அரசியில் ஏன பல விவாதகங்கள் கிளம்பி உள்ளன. இந்தச் சூழலில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மேலும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது என்றே கூறலாம்.

அரசியலாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும் வித்தியாசமான வாசகங்களுடன் கூடிய போஸ்டர்களை உருவாக்கி ஒட்டுவதில் கைதேர்ந்தவர்களான மதுரை வாசிகளின் தற்போதைய போஸ்டர் அனைத்து மக்களையும் கூடுதலாக உற்று நோக்க வைத்துள்ளது.

Tags:    

Similar News