போலீஸ் உடையணிந்து 80 லட்சம் கொள்ளை

15 மணி நேரத்தில் பணத்தை மீட்டு 5 பேரை கைது செய்தது போலீஸ்

Update: 2021-01-20 17:30 GMT

கேரள மாநிலம் நெய்யாற்றிகரை பகுதியை சேர்ந்தவர் சம்பத் இவர் பிரபல நகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார், இவர் கேரள மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள மற்ற நகை கடைகளுக்கும் மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு நகையை விற்பனை செய்த பணம் ரூபாய் 76லட்சத்தி 40 ஆயிரத்தை எடுத்து கொண்டு கேரளாவிற்கு சொகுசு காரில் புறப்பட்டனர்.

தக்கலை அருகே காரவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருக்கும் போது மற்றொரு சொகுசு காரில் போலீசார் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் அந்த பணத்தை சினிமா பட பாணியில் வழிமறித்து கொள்ளையடித்து சென்றனர்.

தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் சம்பத் தக்கலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காரை வழிமறித்து ரூ.76.40 லட்சம் கொள்ளையடிக்க போலீஸ் வேடமணிந்து வந்த 4-மர்ம நபர்களையும் பிடிக்க போலீசார் நான்கு தனி படை அமைத்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் கேரள மாநிலம் தீருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததில் அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் திருவனந்தபுரத்தை சேர்ந்த டிரைவர் கோபக்குமார், சுரேஷ்குமார், கண்ணன், ராஜேஷ்குமார், மனு என்ற சஜின்குமார் ஆகிய 5-பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 76.40 லட்சத்தை பறிமுதல் செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய கார் போலீஸ் உடை மற்றும் 10-செல்போன்களை பறிமுதல் செய்தனர்

15-மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரின் செயல் மாவட்ட மக்களின் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

Similar News