ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவின் புதிய கட்டிடம் துவக்கம்

Update: 2021-02-05 17:30 GMT

பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் தமிழகத்திலேயே அதிக வருமானத்தை ஈட்டி தரும் கன்னியாகுமரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைமை அழுவலகமான நாகர்கோவிலில் செயல்படும் ஆவின் தலைமை அலுவலகத்தில் நிர்வாக வசதிக்காக கூடுதல் கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு அதன் படி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் மற்றும் கூட்ட அரங்கத்திற்கான கட்டிட கட்டுமான பணிகள் இன்று தொடங்கின.

முன்னதாக நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் மாவட்ட ஆவின் பெருந்தலைவருமான அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News