மாற்று திறனாளிக்கு பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவி

Update: 2021-01-28 13:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், மாற்று திறனாளியான இவர் பஹ்ரைன் நாட்டு ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சுரேஷ் காலடி என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் மருத்துவ உதவிகேட்டு கோரிக்கை வைத்தார்கள். அதன்படி குமரிமாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் மூலம் சுப்ரமணியனின் குடும்ப சூழ்நிலையை கேட்டறிந்த சுரேஷ் காலடி மற்றும் பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இணைந்து ரூபாய் 65500 ஏற்பாடு செய்தார்கள்.

இதனை பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் ஜோசப் நெல்சன் முன்னிலையில் குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தங்கம் மாற்று திறனாளி சுப்பிரமணியனிடம் ரூபாய் 65,500 ரொக்க பணத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News