உலக சுற்றுலா தினம்: கன்னியாகுமரியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் உலக சுற்றுலா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் செப்.27ம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சர்வதேச புகழ் பெற்ற முக்கடல் சங்கமிக்கும் குமரி கடற்கரை சுற்றுலா தலத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் உலக சுற்றுலா தினம் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது.
அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொத்துகள், இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து தமிழ்நாடு சுற்றுலா துறையினர் வரவேற்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகளுடன் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.