தடகளத்தில் வெற்றி பெற்ற பெண் காவலருக்கு காவல்துறை சார்பில் பாராட்டு
தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற, குமரியை சேர்ந்த பெண் காவலருக்கு, காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு காவல் துறையினருக்கான, 61வது மண்டல அளவிலான தடகள போட்டிகள், திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் பிற தடகள போட்டிகளில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் பெண் காவலர் கிருஷ்ண ரேகா 3 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்கள் பெற்றார்.
தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று, குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பெண் காவலரை நேரில் வரவழைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவரை வெகுவாக பாராட்டினார்.