'பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சரிவை சந்திக்கும்' - தளவாய் சுந்தரம்

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சரிவை சந்திக்கும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

Update: 2022-01-14 14:14 GMT

தளவாய் சுந்தரம் பேட்டி அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆட்சி பொறுப்பேற்று 8 மாதங்களை கடந்தும் மக்களுக்கு ஒன்றும் செய்யாத தி.மு.க.வின் ஆட்சி காலத்தில் பொதுமக்கள் வேதனையை மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மக்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதனை விட்டு விட்டு எதை எல்லாம் செய்ய கூடாதோ அதையெல்லாம் தி.மு.க. அரசு செய்து வருகிறது.

இதற்கு பிரதிபலனாக வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. விற்கு மக்கள் சரியான பாடம் கற்று கொடுப்பார்கள், ஆட்சிக்கு வந்த 8 மாதத்திலேயே இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் நினைக்கும் அளவிற்கு தி.மு.க. ஆட்சி உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News