ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா..!

குமாரபாளையத்தில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

Update: 2024-07-01 12:00 GMT

குமாரபாளையத்தில் நடந்த ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.எல்.ஏ. தங்கமணி பேசினார்.

ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா குமாரபாளையத்தில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

குமாரபாளையத்தில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் மாவட்ட ஆளுநர் நடேசன் தலைமையில் நடந்தது. புதிய தலைவராக சண்முகம், செயலராக குணசீலன், பொருளராக கருணாகரன் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்று வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது:

நானும் இதில் உறுப்பினராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு தேர்தலிலும் குமாரபாளையம் பகுதி மக்கள் மிகுந்த ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எப்போதும் நன்றி செலுத்த கடமை பட்டவன் ஆவேன். சங்கத்தின் சேவைப்பணிகளுக்கு என்னால் ஆனா உதவிகளை செய்ய எப்போதும் தயாராக உள்ளேன். புதிய நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். விழா ஏற்பாடுகளை பார்க்கும்போது புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி, சங்ககிரி எம்.எல்.ஏ. சுந்தரராஜ் தலைமையில் 101 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் முன்னாள் தலைவர் சந்திரன், மாவட்ட ஆளுனர் செந்தில்குமார், துணை ஆளுநர் செங்கோட்டுவேல், மண்டல ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, மாவட்ட ஆளுனர் தேர்வு சிவசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News