அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கியது.

Update: 2024-07-03 11:45 GMT

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழாவில் முதல்வர் ரேணுகா பேசினார்.

குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நேற்று துவங்கியது. ஜூலை 10 வரை இளங்கலை மற்றும் இளமறிவியல் முதலாம் ஆண்டு சேர்க்கை மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

கல்லூரி முதல்வர் ரேணுகா கூறியதாவது:

கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்காத மாணவர்கள் ஜூலை 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உதவிக்கு கல்லூரியின் சேர்க்கை உதவி மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 8ல் நடைபெறும். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்து கல்லூரியில் சேராத மாணவர்கள் ஜூலை 8ல் கல்லூரிக்கு வந்து மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு குறித்து காவல்துறையினர் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் 

குமாரபாளையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு குறித்து காவல் துறையினர் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

நாமக்கல் மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆணையின்படி மாவட்ட மதுவிலக்கு காவல்துறை மற்றும் காவல்துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. கஞ்சா, கஞ்சா சாக்லேட், போலி மதுபான பாட்டில்கள் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி, போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. மேலும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி முதல்வர் ரேணுகா, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பலர் பங்கேற்றனர். மேலும் இதே கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.

இதில் காவல் ஆய்வாளர்  ராமகிருஷ்ணன் பேசியதாவது: போதை என்பது மனிதனை அடிமையாக்க வேண்டும். அது கல்வி போதை மற்றும் தொழில் சார்ந்த போதைகளாக இருக்க வேண்டும். நம்மை அடிமையாகவும் மூடனாகவும் மற்றும் போதைகளுக்கு எதிராக என்றும் மாணவ மாணவிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.


Tags:    

Similar News