அரசு பள்ளி சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் அரசு பள்ளி சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-06-29 06:30 GMT

படவிளக்கம் :

போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது.

அரசு பள்ளி சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் அரசு பள்ளி சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நாமக்கல் மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆணையின்படி மாவட்ட மதுவிலக்கு காவல்துறை மற்றும் காவல்துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை சாக்லேட், போலி மதுபான பாட்டில்கள் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருகின்றனர். போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. மேலும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி தலைமையாசிரியர் ஆடலரசு, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பலர் பங்கேற்றனர்.

போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது.

Tags:    

Similar News