வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம், மாதவலாயம் பகுதியை சேர்ந்தவர் அம்ஜித்கான் இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தார். சிலமணிநேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் மாரிச்செல்வன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் மோட்டார் சைக்கிளை திருடியது அதே பகுதியை சேர்ந்த சமீர் @ முகமது சமீர் மீரான்(26) என்பதை கண்டுபிடித்தார்.
இவர் ஏற்கனவே இரண்டு மோட்டார் சைக்கிளை திருடியதும் இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. பின்பு குற்றவாளியை பிடித்து இதனை தொடர்ந்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.