குமரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
குமரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மலைப்பாம்பு இரை எடுத்து ஊர்ந்து போக முடியாத நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்களில் சிலர் பார்த்தனர்.
இதனை தொடர்ந்து வனதுறையினருக்கு தகவல் அளித்த பொதுமக்கள் மலைப்பாம்பு அங்கிருந்து நகர்ந்து போகாமல் செய்தனர்.
பொதுமக்கள் கூடி நிற்பதை கண்டு சீறி கொண்டு இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அதனை பாதுகாப்பாக எடுத்து சென்ற வனத்துறையினர் அதனை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
குடியிருப்பு பகுதியில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.