உலக டேக்வாண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி பாராட்டு
உலக டேக்வாண்டோ வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்தார்
நேபாள் நாட்டில் நடைபெற்ற 7 வது உலக அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் பங்கேற்றனர்.
மேற்படி நடைபெற்ற போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 ஆண்கள் நான்கு தங்கப்பதக்கமும் மூன்று வெள்ளிப்பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர். டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றவர்கள் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.டேக்வாண்டோ போட்டியில் உலக அளவில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீரங்கனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.