குமரியில் 308 பயனாளிகளின் நகைகடன் ரத்து செய்து ஒப்படைக்கப்பட்டது
குமரியில் 308 பயனாளிகளின் நகைகடன் ரத்து செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் அரசு அறிவித்துள்ள நகை கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 5 சவரனுக்குட்பட்ட நகைகள் 308 பயனாளிகளின் 93-லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நகைகடன் தள்ளுபடி ஆன பயனாளிகள் தமிழக முதல்வருக்கு தங்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.