இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம்

இலங்கையில் கலவரம் எதிரொலியாக குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

Update: 2022-05-17 08:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் முதல் நீராடி காலனி வரையிலான 48 மீனவ கிராமங்கள் மற்றும் கடல் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது

பெரும் நிதி நிலை மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் மக்களின் போராட்டம் கலவரமாக மாறி உள்ளது. இதனிடையே இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடற்கரை பகுதிகள், கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே இலங்கையில் கலவரம் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதன்படி சின்னமுட்டம் முதல் நீராடி காலனி வரையிலான 48 மீனவ கிராமங்கள் மற்றும் கடல் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

Tags:    

Similar News