குமரியில் 550 பேருக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்

குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 550 பேருக்கு 1,30,000 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை தளவாய் சுந்தரம் வழங்கினார்.

Update: 2021-11-20 13:15 GMT

குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 550 பேருக்கு நிவாரண பொருட்களை எம்எல்ஏ தளவாய் சுந்தரம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் 72 மணி நேரத்திற்கு மேலாக பெய்த அதி தீவிர கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது.

இந்த கனமழையால் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சகாயநகர், தோவாளை, தேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உடைகள், உடைமைகள் காட்டாற்று வெள்ளத்தில் காணாமல் போனது.

இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 550 குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் தனது சொந்த நிதியில் இருந்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதன்படி ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை என சுமார் ஒரு லட்சத்து என்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News