சாலை தடுப்பிற்கு முள்வேலி தடுப்பா? வாகன ஓட்டிகள் அச்சம்

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்‌ ஏற்படும் ஒரு சில இடங்களில் தடுப்பு வேலி என்ற பெயரில் முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-05-05 11:30 GMT

காஞ்சிபுரம், சங்கர் மடம் எதிரில், சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள முள்வேலியுடன் கூடிய தடுப்புகள்

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு அனைத்து தரப்பினரையும் கவலை அடைய செய்துள்ளது. இந்நிலையில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சங்கரமடம் , பேருந்து வெளியேறும் சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த சாலையின் நடுவில் சாலை தடுப்புகள் அமைப்பது காவல்துறை வழக்கம்.

இந்நிலையில் திடீரென அதற்கு மாற்றாக முள் தடுப்பு வேலி சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகும். வாகன ஓட்டிகள் உரசிக் கொள்ளும் போது இதில் சாய்ந்தால் இது உள்ள முள்வேலி உடலில் பல இடங்களில் காயத்தை ஏற்படும் என்பதால் இதனை சாதாரண சாலை தடுப்புகளாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News