காஞ்சியில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை..!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் இரண்டு கொலை வழக்குகள் என பிரபாகர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-12-26 07:15 GMT

கொலை செய்யப்பட்ட பிரபாகர்.

 காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் இளைஞர் ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  சம்பவ இடத்தை பார்வையிட்ட  எஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

காஞ்சிபுரம் வ உ சி தெருப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்கின்ற பிரபாகர். இவர் மீது காஞ்சிபுரத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தவிர இன்று ஏற்கனவே நடைபெற்ற கொலை வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அங்கு சென்று விட்டும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வீட்டிற்கு அருகே வரும்போது, காரில் வந்த ஐந்து மர்ம நபர்கள் அவரை மடக்கி சரமாரியாக வெட்டத்  துவங்கி உள்ளனர்.

அவர்களிடம்  இருந்து தப்பிக்க அருகில் உள்ள தெரு பகுதி வழியாக இரத்த காயங்களுடன் பட்டப் பகலில் ஓடிய நிலையில் தொடர்ந்து மர்ம நபர்கள் பின் தொடர்ந்து விரட்டி அவரை வெட்டிச்  சாய்த்து உள்ளனர்.

இச்சம்பவத்தில் பிரபாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் , அங்கு இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் பார்வையிட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  மேலும் மோப்பநாய் டைகர் உதவியுடன் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தடய அறிவியல் துறையினர் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தும் பணிபுரிந்து வருகின்றனர்.  பட்டப் பகலில் வாலிபர் ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் இரண்டு கொலை வழக்குகள் உள்ளதால் ஏ ப்ளஸ் பிரிவில் இவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

Tags:    

Similar News