காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தேர்வான புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா அண்ணா அரங்கத்தில் ஏற்பாடுகள் நடைபெறுகிறது
காஞ்சிபுரம் பெருங்காயம் சரியாக இருந்த நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் முதல்முறையாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாமன்ற உறுப்பினராக பதவியேற்கும் விழா மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்த அறிஞர் அண்ணா அரங்கில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அண்ணா அரங்கத்தில் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய வண்ணம் தீட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பதவி ஏற்பு விழா மேடை வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட உள்ளது . மேலும் மாநகராட்சி அலுவலகம் மற்றும் அறிஞர் அண்ணா அரங்கம் மின்விளக்குகளால் ஒளிரச் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.