காஞ்சிபுரம் அருகே கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி, திடுக் தகவல்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீசார்கைது செய்தனர்.

Update: 2021-07-30 03:45 GMT

பெரிய காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவை சேர்ந்த காஜா என்பவரது மகன் நவ்ஷத். ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 2008 இல் காஞ்சிபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அந்த பெண்ணை  மதம்மாற்றி ரசியா என பெயர் மாற்றி  ஒரு மகள். ஒரு மகன் உடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

நவ்ஷத்க்கு குடி, கஞ்சா உள்ளிட்ட பழங்களால் வேலைக்கு செல்வது கிடையாது. கணவர் குடும்ப செலவிற்கு போதிய பணம் அளிக்காததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முழு மது போதையில் வீட்டிற்கு வந்து நசியாவிடம் வழக்கம்போல்  தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த நவ்ஷத் வீட்டில் இருந்த மரம் வெட்டும் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார்.

இது சாமர்த்தியமாக தப்பிய நிலையில் ரசியா ஆத்திரமடைந்து அவரிடம் கைத்தியை பிடிங்கி நவ்ஷத்யை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதுகுறித்து அருகிலிருந்த நபர்கள் சிவகாஞ்சி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் பேரில் ஆய்வாளர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.

அங்கிருந்த ரசியாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குடும்பத் தகராறில் கணவனை வெட்டியதாக மனைவி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

மது மற்றும் தீய பழக்கங்களால் இரு பிஞ்சு குழந்தைகள் இழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News