கொரோனா பரவுதலை தடுக்க அரசு அலுவலங்களில் கிருமிநாசினி தெளிப்பு ..

காஞ்சிபுரம் மாவட்டத்தில்.

Update: 2021-05-12 04:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.பரவல்  தடுப்பு  நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட பல துறை அலுவலர்கள் , அரசு மருத்துவமனை துணை இயக்குனர் மருத்துவர் ஜீவா மற்றும் பல மருத்துவர்கள் , செவிலியர்கள் , அரசு ஊழியர்கள்  என பலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 50சதவீத பணியாளர்கள் உள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பெருநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News