தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-31 09:30 GMT

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவாலன் கேட் பகுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது .

உழவர்களுக்கு அளித்த உறுதி மொழியிலிருந்து பின் வாங்கும் மோடி அரசிற்க்கு எதிராக துரோக தினமாக இன்று  நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகின்றது.போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற கோரியும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்க்கு இழப்பீடு வழங்க கோரியும், விவசாய விளைபொருட்களுகௌகு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க கோரியும், 2020 மின்சார மசோதனை திரும்ப பெற கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News