காஞ்சி சங்கரமடம் சார்பில் ரூ25 லட்சம் முதல்வர் கொரோனா நிவாரண நிதி

காஞ்சிசங்கர மடம் சார்பில் ரூ.25 லட்சம் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக சங்கரமட குழுவினர் தமிழக முதல்வரிடம் அளித்தனர்.

Update: 2021-05-19 09:00 GMT

காஞ்சி சங்கர மடம்

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடம் சார்பில் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை மூலமாக 25 லட்சம் வழங்கப்பட்டதாக அறிவித்தார்.

அதன் வங்கிக் காசோலையினை  காஞ்சி காமகோடி பீட மேலாளர்  சுந்தரேசன் மற்றும் அறக்கட்டளை அறங்காவலர் டி எஸ்  ராகவன் , டி ஆர் ராஜகோபாலன்  , பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் தமிழக முதலமைச்சரை  நேரில் சந்தித்து வழங்கினர்.

இந்த தொற்று நோய் விரைவில் அகலமும் , இயல்பு நிலை திரும்பும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடைய பிரார்த்தனையும் அருளாசியும் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.


Tags:    

Similar News