23 கிலோ கஞ்சா கடத்தல்- இரண்டு பேர் கைது

Update: 2021-01-28 05:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23 கிலோ கஞ்சா கடத்தியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் டில்லி பாபு தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை சந்திப்பில் ஆந்திராவில் இருந்து சுமார் 23 கிலோ கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த பவன்குமார் மற்றும் பானு பிரகாஷ் என்பதும் அவர்கள் கஞ்சா கடத்தி வந்ததாகவும் கூறியதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News