காஞ்சிபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

காஞ்சிபுரம் மாவட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தில் 1130 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிப்பு

Update: 2021-04-30 09:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் 2021ல் பதிவான  மிண்ணனு வாக்குபதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் பொன்னேரிகரையில் அமைந்துள்ள அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியில் மூன்று கட்ட பாதுகாப்பில் உள்ளது.

நாளை மறுநாள் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது. வாக்குபதிவு அன்று ஊரடங்கு அமலில் உள்ளதாலும் வாக்கு எண்ணிக்கையின்போது‌ எந்த வித அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளி பாதுகாப்பில் 784 காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு , போக்குவரத்து உள்ளிட்ட பணிகளை கவனிக்கின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 5 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 346 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை தவிர துணை ராணவத்தினரும் வாக்கு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

Similar News