ஈரோட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு புதன்கிழமைதோறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வுகள் நடைபெறவுள்ளது.;
இலவச குரூப்-4 மாதிரி தேர்வு (பைல் படம்).
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு புதன்கிழமைதோறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப்-4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 2025ம் ஆண்டு நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் மாணவ மாணவியர்கள் தேர்வினை சிறந்த முறையில் எழுதி, வெற்றிபெறும் வகையில், ஒவ்வொரு புதன்கிழமைதோறும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முழுமையான மாதிரித் தேர்வுகள் வரும் பிப்ரவரி 26ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இத்தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/MGzcFDc3diqKyn3C6 என்ற கூகுள் ஃபார்ம் லிங்கில் வரும் 24ம் தேதிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.