ஈரோடு மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் 212 மனுக்கள்
Collector Office Erode -ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாளில் பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.
Collector Office Erode - தமிழகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்தந்த மாவட்டக் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் நடைபெறுவது வழக்கம். அதி மக்களின் குறைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் உடனே அனுப்பப்பட்டு குறைகள் தீர்க்கப்படும்.
அந்த வகையில், நேற்று (8ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை வேலைவாய்ப்பு, பட்டா கேட்பு போன்ற 212 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அதன்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வளிப்பார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2