பண்ணாரி கோவில் உண்டியல் திறப்பு : 1.05 கோடி பக்தர்கள் காணிக்கை

பண்ணாரி கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1 கோடியே 5 லட்சத்து 35 ஆயிரம் செலுத்தியிருந்தனர்.

Update: 2021-11-10 18:15 GMT
பண்ணாரி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றபோது எடுத்தப்படம்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 18 உண்டியல்கள் உள்ளன.

இந்த உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டன.கோவில் துணை ஆணையர் கூடுதல் பொறுப்பு சபர்மதி மற்றும் இந்து அறநிலைய ஈரோடு உதவி ஆணையர் அன்னக்கொடி -முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

உண்டியல்களில் பக்தர்கள் மொத்தம் 1 கோடியே 5 லட்சத்து 35 ஆயிரத்து 535 ரூபாயை காணிக்கையாக செலுத்தி இருந்தார்கள். மேலும் ஒரு கிலோ 190 கிராம் தங்கம், ஒரு கிலோ 175 கிராம் வெள்ளியும் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News