அந்தியூர் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

அந்தியூர் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-01 05:15 GMT

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியுடன் செல்லப்பன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கால்வாரை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (32). இவர் வீட்டில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Similar News