பவானி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

பவானி அருகே உள்ள சித்தோட்டில் தனித்து வாழும் பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை செய்த தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-20 14:45 GMT

கைது செய்யப்பட்ட ராஜா.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பச்சப்பாளிமேட்டை சேர்ந்தவர் வீரன் மகன் ராஜா (36)‌. கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், ராஜா மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சித்தோடு பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் மற்றொரு பெண்ணுடன் இருந்து வந்துள்ளார்.

இந்த பெண்மணிக்கு 13 வயதில் மகளும் , 11 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து, ராஜா 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரில் பேரில், ராஜாவை பவானி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Similar News