பவானி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
பவானி அருகே உள்ள சித்தோட்டில் தனித்து வாழும் பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை செய்த தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பச்சப்பாளிமேட்டை சேர்ந்தவர் வீரன் மகன் ராஜா (36). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், ராஜா மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சித்தோடு பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் மற்றொரு பெண்ணுடன் இருந்து வந்துள்ளார்.
இந்த பெண்மணிக்கு 13 வயதில் மகளும் , 11 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து, ராஜா 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரில் பேரில், ராஜாவை பவானி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.