ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தத்திற்கு காலக்கெடு

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வசதியாக ஜூலை 11-ம் தேதி முதல் 16 ம் தேதி வரை 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த்துள்ளது.

Update: 2022-07-03 11:36 GMT

(கோப்பு படம்)

நடப்பு 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, 2 தொடர்பான அறிவிப்பு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி வெளியிடப் பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வுதாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தாள் 2-க்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர். இதையடுத்து விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, 2 ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பத்தில் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை திருத்தம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வருங்காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News