உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

Coimbatore News- உயர்ரக போதை பொருளான மெதம்பெட்டமைன் வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த திவாகர் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்

Update: 2024-04-29 16:15 GMT

Coimbatore News- திவாகர்

Coimbatore News, Coimbatore News Today- சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் இன்று மதுக்கரை பகுதியில் உயர்ரக போதை பொருளான மெதம்பெட்டமைன் விற்பனைக்கு வைத்திருப்பதாக மதுக்கரை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடமான மச்சகவுண்டன் பாளையம் அருகே விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது உயர்ரக போதை பொருளான மெதம்பெட்டமைன் வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த திவாகர் (22) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 5.750 கிராம் எடையுள்ள உயர்ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் திவாகரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக யாரேனும் செயல்பட்டாலோ, கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News