கடலூர் அருகே மதுபாட்டில் வயிற்றில் குத்தி இளைஞர் சாவு

கடலூர் அருகே குடிபோதையில் சைக்கிளில் சென்றபோது குடிக்க வைத்திருந்த மதுபாட்டில் குத்தி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-03-13 04:46 GMT

வெங்கடேஷ்.

கடலூர் அருகே உள்ள சான்றோர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் 28 வயதான இவர் நேற்று அவருடைய நண்பர் ஒருவரின் இறப்புக்கு சென்று வந்து உள்ளார்.

பின்னர் நேற்று மாலை நண்பரின் இழப்பை தாங்க முடியாமல் மது குடித்து விட்டு இரண்டு சாராய பாட்டில்களை தனது வேட்டியில் வைத்து கொண்டு சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். குடி போதையில் வந்த அவர் ஒரு வேக தடையின் மீது ஏறும்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது அவரின் இடுப்பில் வைத்திருந்த இரண்டு மது பாட்டில்கள் உடைந்து அவரது வயிற்றிலேயே குத்தி இரத்தம் வெளியேற தொடங்கி உள்ளது.

அப்போது அந்த வழியாக வந்த சிலர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அழைத்து வந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் முன்னரே இரத்தம் அதிக அளவில் வெளியேறிய காரணத்தினால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் அவரது உடல் உடற்கூறாய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து முதுநகர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News