கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் துவங்கி வைத்தார்.

Update: 2022-04-29 07:30 GMT

கடலூரில்,  அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை, முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் திறந்து வைத்தார்.

கோடை வெயிலில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில்,  தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடலூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கடலூர் அடுத்த பாதிரிகுப்பத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, ஒன்றிய அதிமுக செயலாளர் காசிநாதன் தலைமையில் முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம் சி சம்பத் கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர், கூழ் போன்ற உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டும் பொருட்களை வழங்கினார். இதில் அதிமுக  அவைத் தலைவர் சேவல் குமார், கடலூர் வடக்கு மாவட்ட பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News