கடலூரில் பீஸ்ட் படம் பிரச்சினை: விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

கடலூரில் பீஸ்ட் படம் பிரச்சினை தொடர்பாக மறியல் செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

Update: 2022-04-07 08:29 GMT

கடலூரில் விஜய் ரசிர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

விஜய் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளது. இந்த நிலையில் கடலூரில் நகர் பகுதியில் அமைந்துள்ள நான்கு திரையரங்கிலும் விஜயின் பீஸ்ட் திரைப்படம் திரையிடப்படுகிறது.

நான்கு திரையரங்கிலும் ரசிகர் காட்சிகள் வெளியிட வேண்டும் என்றும்,அது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒளிபரப்ப வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் கடலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள நியூ சினிமா திரையரங்கில் ரசிகர் காட்சி விஜய் ரசிகர் மன்றம் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் கடலூர்- புதுவை சாலையில் திரையரங்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாரதி சாலை மற்றும் அண்ணா சாலை முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விஜய் ரசிகர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களை கலைத்தனர். மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளான சீனு மற்றும் ராஜசேகர் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இதனால் கடலூரில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News