நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடலூர் தி.மு.க. சார்பில் விருப்ப மனு

கடலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

Update: 2021-11-26 03:46 GMT

கடலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வினர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் விருப்ப மனு அளித்தனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஒரு பகுதியான மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை கழகத்தினர் அந்தந்த பகுதியில் கழக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களையும் தலைமை கழகம் நிர்ணயித்துள்ள தொகையையும் சேர்த்து அளிக்கலாம் என கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.

அதன்படி கடலூர் நகர கழகத்தில் விருப்ப மனுக்களை பெற்று இப் பணியை அமைச்சர்  துவக்கி வைத்தார். கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News