நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைவு

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேற்று உயிரிழந்தார்.

Update: 2021-08-09 02:37 GMT

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன்

கடலூர் செல்லகுப்பத்தைச் சேர்ந்த வாகரன் மகன் கடல்தீபன் (40) . பொறியாளரான இவர், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, குறிஞ்சிப்பாடி தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டவர். இவர் நாம் தமிழர் கட்சியின் கடலூரின் முகமாக  பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகிய நிலையில், நோய் தொற்று உடலில் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்தது. கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று மாலை மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கடல்தீபன் உயிரிழந்தார். நாம் தமிழர் கட்சியின் கடலூர் நிர்வாகிகள் கடல்தீபன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News