கடலூர்: குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 52 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சி.புதுப்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் 52 வயதான அக்னி வீரன்.
கடந்த 2020 ம்ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியைச் சார்ந்த மூன்றரை வயதுடைய பெண் குழந்தை, அக்னி வீரன் வீட்டின் அருகே விளையாட சென்ற போது பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் அது தொடர்பான வழக்கின் விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இதனையடுத்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில்,மூன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த அக்னிவீரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சமூக பாதுகாப்புத்துறை நலவாழ்வு நிதியிலிருந்து கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் 30 நாட்களுக்குள் 5 லட்ச ரூபாயை குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகளின்படி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி எழிலரசி உத்தரவிட்டுள்ளார்.