கடலுார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

சேவாபாரதி அமைப்பு சார்பில், கடலுார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு, 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

Update: 2021-06-05 14:00 GMT

சேவாபாரதி இண்டர்நேஷல் அமைப்பு சார்பில், கொரோனா  இரண்டாவது அலை பரவலையொட்டி, கடலுார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

அமெரிக்க அமைப்பினர் உதவியுடன்  இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை கடலுாரில் டாக்டர் ஜெயலட்சுமியிடம் சேவாபாரதி அமைப்பு வழங்கியது.மாவட்ட செயலாளர் கருணாகரன், சேவாபராதி மாவட்ட தலைவர் பாலமுரளி கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேவா பாரதி மாவட்ட செயலாளர் வேல்முருகன் செய்திருந்தார்.

Tags:    

Similar News