கடலூரில் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
நாளை 75வது சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் சுதந்திர தின விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவலர் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாளை சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கொடியேற்ற உள்ளார். இந்நிலையில் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மோப்ப நாய் ஜாக்ஸ் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையம்,ரயில் நிலையம் போன்ற இடங்களிலும் இவர்கள் தொடர்ந்து சோதனை நடத்தினர்.