கடலூர் மாவட்டத்தில் நவ. 19ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் நாளை ( நவ. 19) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக, இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மழையை சூழ்ந்த குளம் போல காட்சியளிக்கிறது. இந்நிலையில் கனமழை காரணமாக, கடலூர் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் நாள் ( நவ,19, விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.