கடலூர் மாவட்ட புதிய எஸ்.பியாக சக்திகணேசன் நியமனம்!
கடலூர் மாவட்ட புதிய காவல்துறை கண்காரணிப்பாளராக சக்திகணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்ல் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதேபோல் மாவட்ட காவல் கண்காணிபாளரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சக்திகணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று தமிழகம் முழுவதும் 27 மாவட்ட கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.