கடலூரில் போக்குவரத்து காவலர்களுக்கு தாெப்பி, குளிர்பானம் வழங்கல்
கடலூரில் போக்குவரத்து காவல் துறையினருக்கு வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள பிரத்தியேக தொப்பி வழங்கப்பட்டது.
வெயில் காலங்களில் அதிக நேரம் வெயிலில் நின்று பணியாற்றுபவர்களுக்கு அதன் தாக்கத்தால் உடலின் இயல்பான வெப்பநிலை உயர்ந்து நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக வெயில் நேரங்களில் போக்குவரத்தை சரி செய்யும் போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து வெயிலில் நின்று பணியாற்றுவதால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றனர்.
இதனை தடுக்கும் பொருட்டு கடலூர் நகர போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் காவல்துறையினருக்கு வெயிலில் இருந்து தலையைப் பாதுகாக்க பிரத்யேக தொப்பி மற்றும் குளிர்பானங்களை கடலூர் துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.