கடலூரில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

Update: 2021-08-03 07:46 GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

கடலூர் மாவட்டத்தில் கோவிட்-19 தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த 01.08.2021 முதல் 07.08.2021வரை ஒரு வாரம் கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று (03.08.2021)கடலூர் டவுன்ஹாலில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க இந்திய மருத்துவ சங்கத்தினர், மருத்துவர்கள், செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் முக கவசம் அணிவோம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்போம், உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News